Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

ADDED : ஜூன் 02, 2025 12:10 AM


Google News
விருத்தாசலம்: பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி மனைவி பவுனாம்பாள், 26; இவர், அதே பகுதியைச் சேர்ந்த மோனகரன், 55; என்பவர் வீட்டில் எலுமிச்சை பழம் பறித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மனோகரன், மனைவி கங்காதேவி, 48; ஆதரவாளர்கள் கம்மாபுரத்தைச் சேர்ந்த பானுபிரியா, 30; கார்குடல் கிராமம் மீனா, ஓட்டிமேடு கிராமம் அனிஷ், 25, ஆகியோர் பவுனாம்பாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், வழக்குப் பதிந்து மனோகரன், கங்காதேவி, மீனா, அனிஷ் ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us