ADDED : மார் 28, 2025 05:26 AM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த வில்லியநல்லுார் ஊராட்சியில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஜெயபால், பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, பாஸ்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், கிளை செயலாளர் செல்வராஜ், வீரப்பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.