Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிற்தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிற்தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிற்தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிற்தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : செப் 28, 2025 12:03 AM


Google News
கடலுார் : அகில இந்திய தொழிற்தேர்வில் தனி தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் 2,000 ரூபாய் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல் நிலை தேர்வுகள் கருத்தியல் தேர்வு வரும் 4ம் தேதியும், செய்முறை தேர்வு மறுநாள் 5ம் தேதியும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 8ம் தேதி ஆகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us