Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கனமழை எச்சரிக்கையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

கனமழை எச்சரிக்கையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

கனமழை எச்சரிக்கையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

கனமழை எச்சரிக்கையால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

ADDED : அக் 22, 2025 09:03 AM


Google News
Latest Tamil News
கடலுார்:

கடலுார் முதுநகர் துறைமுகத்தில், புயல்,கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், நல்லவாடு, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடித்து வந்து கடலுார் முதுநகர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்கின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் 4,500க்கும் மேற்பட்டவை, கடலுார் முதுநகர் மற்றும் மீன்பிடி துறைமுக பகுதிகள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் கடலுார் முதுநகர் துறைமுகம் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us