Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓடையில் சடலம்; போலீசார் விசாரணை

ஓடையில் சடலம்; போலீசார் விசாரணை

ஓடையில் சடலம்; போலீசார் விசாரணை

ஓடையில் சடலம்; போலீசார் விசாரணை

ADDED : அக் 12, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்; விருத்தாசலம் மாரி ஓடையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை ரயில்வே மேம்பாலத்தின் கீழே செல்லும் மாரி ஓடையில் நேற்று காலை 48 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர்.

அவர், வழுக்கை தலையுடன் மஞ்சள் நிற கட்டம் போட்ட சட்டை, நீல நிற கட்டம் போட்ட கைலி, காப்பி நிற டிராயர் மற்றும் வலது கையில் தங்க மோதிரம் அணிந்திருந்தார்.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. மேலும், அவரது வாயில் மென்று திண்ற நிலையில் இலைகள் இருந்தன.

இதனால், ஏதேனும் விஷச்செடியில் இருந்து இலைகளை பறித்து தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை. அவரது சடலம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us