பட்டாசு விற்பனை வாலிபர் மீது வழக்கு
பட்டாசு விற்பனை வாலிபர் மீது வழக்கு
பட்டாசு விற்பனை வாலிபர் மீது வழக்கு
ADDED : மார் 01, 2024 12:00 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெட்டிக்கடையில் பட்டாசு விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, எம்.பரூர் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்றது தெரிந்தது.
அதில், பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் சுப்ரமணியன் மகன் சுதாகர், 37, மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


