Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

ADDED : அக் 11, 2025 06:51 AM


Google News
குறிஞ்சிப்பாடி : பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த கன்னித்தமிழ்நாடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு மனைவி ரம்யா, 29. இவருக்கும், இவரது உறவினர் ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே மனை பிரச்னை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே சிசிடிவி., கேமரா பொருத்துவது தொடர்பான தகராறு ஏற்பட்டது. அதில் ராஜேந்திரன் தரப்பினர் ரம்யா, ராஜகுரு அவர்கள் மகன் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ராஜேந்திரன், அவரது மகன் விமல்ராஜ், விமல்ராஜ் மனைவி விமலா ஆகியோர் மீது, குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us