/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அண்ணாமலை பல்கலையில் கணினி பயன்பாடு பயிலரங்கம்அண்ணாமலை பல்கலையில் கணினி பயன்பாடு பயிலரங்கம்
அண்ணாமலை பல்கலையில் கணினி பயன்பாடு பயிலரங்கம்
அண்ணாமலை பல்கலையில் கணினி பயன்பாடு பயிலரங்கம்
அண்ணாமலை பல்கலையில் கணினி பயன்பாடு பயிலரங்கம்
ADDED : பிப் 01, 2024 11:56 PM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 'கணினி வன்பொருள் மற்றும் சரி செய்தல் அடிப்படைகள் என்ற தலைப்பில் இரு நாள் பயிலரங்க துவக்க விழா நடந்தது.
டிஜிட்டல் தகவல் மைய இயக்குநர் சுபாஷினி வரவேற்றார். துணைவேந்தர் கதிரேசன் பயிலரங்கை துவக்கி வைத்தார். பிரெயின் இன்னோவேஷன் சி.இ.ஓ., முகமது இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர்வடிவழகன், ராம்பிரபு மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கபாலீஸ்வரன், ஆனந்த சித்தன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழாவில் புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள், துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ், பி.ஆர்.ஓ., ரத்தினசம்பத்பங்கேற்றனர்.


