Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை

அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை

அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை

அரசு மாணவர் விடுதியில் ஊழியர் தற்கொலை

ADDED : அக் 08, 2025 12:37 AM


Google News
ராமநத்தம்; ராமநத்தம் அருகே அரசு மாணவர் விடுதி யில் துாய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேப்பூர் அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 57; இவர், ராமநத்தம் அடுத்த தொழுதுார் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில், கடந்த 2011ம் ஆண்டு முதல், துாய்மை பணியாளராக வேலை செய்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றார்.

அவரது மொபைல் போனுக்கு அவரின் அண்ணன் மகன் தங்கதுரை தொடர்பு கொண்டார்.

அப்போது, அண்ணாதுரை மொபைல் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த தங்கதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அங்கு அண்ணாதுரை துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us