ADDED : அக் 22, 2025 12:34 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் மகள் கவுசல்யா,18; கடலுார் தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கந்தவேல் அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


