ADDED : செப் 27, 2025 08:26 AM
விருத்தாசலம் : நாட்டு பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
அப்போது தில்லைநகர் கம்பர் தெருவில் வாசு, 60; என்பவரது வீட்டில் நாட்டு பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நாட்டு பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து வாசுவை கைது செய்தனர்.


