Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு

புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு

புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு

புத்தேரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு

ADDED : அக் 07, 2025 12:34 AM


Google News
திட்டக்குடி: புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரருக்கு பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரருக்கு பவுர்ணமியொட்டி நேற்று காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us