ADDED : அக் 12, 2025 05:35 AM
விருத்தாசலம் : பெட்டிக்கடையில் குட்கா பதுக்கிய வாலிபரை போலீார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, பெருமாள் கோவில் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. உடன், 18,500 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் வீராசாமி, 44; என்பவரை கைது செய்தனர்.


