Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மழையால் கோபுரம் சேதம்: அமைச்சர் பார்வையிட்டார்

மழையால் கோபுரம் சேதம்: அமைச்சர் பார்வையிட்டார்

மழையால் கோபுரம் சேதம்: அமைச்சர் பார்வையிட்டார்

மழையால் கோபுரம் சேதம்: அமைச்சர் பார்வையிட்டார்

ADDED : அக் 23, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
சிறுபாக்கம்: தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்த கோவிலை அமைச்சர் பார்வையிட்டார்.

சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடியிலுள்ள ஆண்டவர் செல்லியம்மன் கோவில் கோபுரம் இடிந்து விழுந்து சேதமானது.

இதுபற்றி தகவலறிந்த அ மைச்சர் கணேசன், சேத மடைந்த கோவிலை, பார்வையிட்டார்.

சம்பவம் குறித்து அமைச்சர் கூறும் போது, 'கோவில் சேதம் குறித்து முதல்வர் மற்றும் அ றநிலையத்துறை அமைச்சரிடம் முறையிட்டு கோவிலை சீரமைத்து குட முழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படு ம்' என தெரிவித்தார்.

இதில் வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், வேல்முருகன், ம.தி.மு.க., ஒன்றிய செயலர் சம்பத்குமார், முன்னாள் மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், வி.ஏ.ஓ., விஷ்ணுராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us