ADDED : அக் 23, 2025 12:57 AM
நடுவீரப்பட்டு: வயிற்றுவலியால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பம் ஐயனார் கோவில் தெருவில் வசித்தவர் அஞ்சலை,68;
அஞ்சலை கடந்த 30 ஆண்டுகளாக மருமகன் வீரமுத்து வீட்டில் வசித்து வருகிறார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அஞ்சலை நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


