/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடனை தி.மு.க., அரசு அடைத்து வருகிறது கடலுாரில் பன்னீர்செல்வம் பேச்சுஅ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடனை தி.மு.க., அரசு அடைத்து வருகிறது கடலுாரில் பன்னீர்செல்வம் பேச்சு
அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடனை தி.மு.க., அரசு அடைத்து வருகிறது கடலுாரில் பன்னீர்செல்வம் பேச்சு
அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடனை தி.மு.க., அரசு அடைத்து வருகிறது கடலுாரில் பன்னீர்செல்வம் பேச்சு
அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடனை தி.மு.க., அரசு அடைத்து வருகிறது கடலுாரில் பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஜன 28, 2024 04:45 AM

கடலுார் : 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளாக வாங்கிய கடனை தற்போது தி.மு.க., அரசு அடைத்து வருகிறது' என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
கடலுார் மாநகர தி.மு.க., சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கடலுாரில் நடந்தது. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
அவைத்தலைவர் பழனி வேல், துணைத் தலைவர் அகஸ்டின் பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், இளைய ராஜா முன்னிலை வகித்தனர்.
மாணவரணி அமைப்பாளர் பகலவன் வரவேற்றார். தலைமை செய்தி தொடர்பாளர் இளங்கோவன், ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பார்வதி லெனின், சசிகலா, சுபாஷினி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகை யில், 'பா.ஜ., தேர்தல் வாக்குறுதியில் அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் எனக்கூறி ஆட்சியைபிடித்தது. ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை.
ஆனால் தி.மு.க., தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளைநிறைவேற்றி வருகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளாக வாங்கிய கடனை தற்போது தி.மு.க., அரசு அடைத்து வருகிறது.
கடும் நிதி நெருக்கடியிலும், பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது' என்றார்.