Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்

பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்

பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்

பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்

ADDED : ஜூன் 10, 2025 07:40 AM


Google News
Latest Tamil News
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் உள்ள குளத்தை சுற்றி மதல் சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரங்களை மாணவர்கள் அதிகளவு படித்து வருகின்றனர். பள்ளிக்கு எதிரில் குளம் உள்ளது. குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்தால் துர்நாற்றம் வீசுவதுடன் குளம் வீணாகி வருகிறது. விஷ ஜந்துகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு படையெடுக்கிறது.

அதே வேளையில் பள்ளி இடைவெளியில் மாணவர்கள் குளத்தின் அருகில் சுற்றித் திரியும் போது, குளத்தில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவித சம்பவங்களை தடுக்க குளத்தை சுற்றி சுவர் அமைப்பதுடன், ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us