Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை

ADDED : அக் 12, 2025 05:20 AM


Google News
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே வாழைத்தோப்பில், மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாய கூலித் தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி பி.டி.எஸ்., மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி, 45; இவரது மனைவி செல்வி, 37; இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

கடந்த, 8 மாதங்களாக வீரமணி, குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 6:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள வாழைத் தோப்பில் வீரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us