பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : பிப் 01, 2024 05:59 AM

கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேல் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை கல்பனாராணி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் கதிர்வேல் வரவேற்றார். கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கி பேசினார். ஆசிரியர் செல்லப்பன் நன்றி கூறினார்.


