Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

ADDED : அக் 07, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்து உள்பிரகாரம் சேறும் சகதியுமானதால், பக்தர்கள் அவதியடைந்தனர்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால், மழை நீர் பூவராக சுவாமி கோவிலின் முன்புறம் உள்ள பிரதான வாயில் வழியாக கோவிலுக்குள் புகுந்ததால், பக்தர்கள் அவதியடைந்தனர்.

கோவிலின் முன்பகுதியில் உள்ள வடிகால் மூலம் மழை நீர் வடிந்து கோவிலுக்குள் செல்லாமல் இருக்கும். கோவிலுக்குள் தேங்கும் மழைநீர் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள வடிகால் மூலம் வெளியேறிவிடும்.

ஆனால், நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக அதிகளவில் தண்ணீர் உள்ளே புகுந்து, குழந்தையம்மன் சன்னதி பகுதியில் முழங்கால் அளவிற்கு தேங்கியது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மழை நீர் வடிகாலை துார்வார வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us