Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்

அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்

அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்

அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்

ADDED : செப் 30, 2025 07:59 AM


Google News
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு அக்., 5, 6 ஆகிய தேதிகளில் சென்று ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us