Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொத்தடிமையாக வேலை செய்த சிறுவர்கள் மீட்பு

 கொத்தடிமையாக வேலை செய்த சிறுவர்கள் மீட்பு

 கொத்தடிமையாக வேலை செய்த சிறுவர்கள் மீட்பு

 கொத்தடிமையாக வேலை செய்த சிறுவர்கள் மீட்பு

ADDED : டிச 04, 2025 05:54 AM


Google News
கடலுார்: தொழுதுார் அருகே ஆட்டுப்பண்ணையில் கொத்தடிமையாக, வேலை செய்து வந்த, 2 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.

கடலுார் மாவட்டம், காடாம்புலியூரை சேர்ந்தவர் சேகர் மனைவி பூஞ்சோலை,35; இவரது 12 வயது மகன் மற்றும் தங்கையின் 13 வயது மகன் ஆகியஇரண்டு பேரும், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2024, ஏப்ரல் மாதத்தில் தொழுதுார் அருகிலுள்ள கிராமத்தில் ஆட்டுப்பண்ணை வேலைக்குசென்றனர்.

அதற்காக பண்ணை உரிமையாளர் 48 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். கடந்த 20 மாதங்களாக இரண்டு சிறுவர்களும் அங்கேயே தங்கிஆடு மேய்த்து வந்தனர். பண்ணை உரிமையாளர் சித்ரவதை செய்ததால், கடந்த நவ., 26ம் தேதி, 2 சிறுவர்கள் தப்பித்து வீட்டிற்கு வந்து விட்டனர்.

இதையறிந்த பண்ணை உரிமையாளர், கடந்த 1ம் தேதி சிறுவனின் வீட்டிற்கு வந்து இருவரையும் அடியாட்கள் மூலம் காரில் கடத்திச்சென்றார்.இரண்டு பேரையும் மீட்டு தரக்கோரி பூஞ்சோலை, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார்.

அதன் பேரில் எஸ்.பி.,உத்தரவின் படி காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து, இரண்டு சிறுவர்களையும் மீட்டு காடாம்புலியூர் அழைத்து வந்தனர்.நேற்று சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us