Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; விருத்தாசலத்தில் பரபரப்பு

ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; விருத்தாசலத்தில் பரபரப்பு

ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; விருத்தாசலத்தில் பரபரப்பு

ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; விருத்தாசலத்தில் பரபரப்பு

ADDED : அக் 14, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்; ஊராட்சி செயலரை கண்டித்து, கிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த மு.அகரம் கிராமத்தில் பள்ளிவாசல் தெரு, முகமதியர் தெரு, ஜின்னா நகர் உள்ளிட்ட தெருக்களில் அதிக அளவில் முஸ்லீம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டுள்ளனர்.

ஆனால் , இதுவரை நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி செயலர் அலட்சியம் காட்டி வந்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரை கண்டித்து, நேற்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us