ADDED : ஜூன் 02, 2025 11:44 PM

புதுச்சத்திரம்: தீர்த்தனகிரி சித்தி விநாயகர் கோவிலில், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி சித்தி விநாயகர் கோவிலில், சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.