ADDED : மே 26, 2025 03:18 AM

புதுச்சத்திரம் : வில்லியநல்லுார் சிலம்பியம்மன் கோவிலில், வைகாசி உற்சவத்தையொட்டி முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் சிலம்பியம்மன் கோவிலில், வைகாசி உற்சவம் கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 10.00 மணிக்கு கிடாபூஜை நடந்தது. முத்துப்பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (26ம் தேதி) மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.