Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது

ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது

ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது

ஆபாச படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல் விற்பனை நிலைய மேலாளர் கைது

ADDED : மார் 18, 2025 05:38 AM


Google News
பண்ருட்டி : சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பண்ட்ரக்கோட்டையை சேர்ந்தவர் சீனு மகன் செல்வகுமார்,45; இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ௨ மகன்கள் உள்ளனர். செல்வக்குமார் தனியார் மோட்டார் பம்ப் செட் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியை மிரட்டி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி வந்தார்.

புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us