கடலுாரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
கடலுாரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
கடலுாரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 11, 2024 03:15 AM
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முகம்மது யாசின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், பொருளாளர் அப்துல் காதர், துணைத் தலைவர் யாசர் அராபத், துணை செயலாளர் உபய்துல்லாஹ் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முகம்மது ஒலி கண்டன உரையாற்றினார்.
அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.