ADDED : செப் 23, 2025 11:36 PM
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி பஸ் ஸ்டாண்டில் பா.ஜ., வின் ஓட்டு திருட்டை கண்டித்து காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
நகர தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திலகர், மாவட்ட பொது செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் சிவராஜ் முன்னிலை வகித்தனர். விஷ்ணு பிரசாத் எம்.பி., கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
வட்டார தலைவர்கள் ஜனார்த்தனன், ராஜா, நிர்வாகிகள் சண்முகம், அம்சவேல், பரமசிவம், அன்பரசி பங்கேற்றனர்.