Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மழையால் கோவில் கோபுரம் இடிந்தது

மழையால் கோவில் கோபுரம் இடிந்தது

மழையால் கோவில் கோபுரம் இடிந்தது

மழையால் கோவில் கோபுரம் இடிந்தது

ADDED : அக் 23, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த பொயன ப்பாடியில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. சேலம், ஆத்துார், நாமக்கல், கடலுார், பெரம்பலுார் பகுதியை சேர்ந்த பலர் குடும்பத்தினர் குல தெய்வமாக வழிபடுகின்றனர். கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் க னமழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் செல்லியம்மன் கோவில் கோபுரம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us