Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

ADDED : அக் 14, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
கடலுார்; பண்ருட்டி அடுத்த மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, வரவேற்றார்.

மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் முற்றோதல், திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. உலக திருக்குறள் பேரவையின் கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியைகள் மகாலட்சுமி, ரேணுகா போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

ஆசிரியை சண்முகப்ரியா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us