ADDED : அக் 03, 2025 01:50 AM

கடலுார்: கடலுார் பீச்ரோடு வள்ளலார் கார், வேன் உரிமையாளர் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் ஆயுதபூஜை விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, கவுன்சிலர் கண்ணன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முருகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில், அ.ம.மு.க., ஜெ., பேரவை இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், சங்க செயலாளர் ஹையத் பாஷா, பொருளாளர் ராஜ்குமார், துணைத் தலைவர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


