Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் யார்?

ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் யார்?

ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் யார்?

ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் யார்?

ADDED : அக் 15, 2025 12:39 AM


Google News
விருத்தாசலம் ;' விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் மணிமுக்தாறு ரயில்வே பாலம் அருகே திருச்சி மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் ரயில்வே இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இறந்தவரிடம், சென்னையில் இருந்து விருத்தாசலம் வரை பயணம் செய்த ரயில் டிக்கெட் இருந்துள்ளது.

பிரேத்தை கைப்பற்றிய விருத்தாசலம் ரயில்வே போலீசார், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us