/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்/ விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்
விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்
விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்
விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்
UPDATED : அக் 20, 2025 09:51 PM
ADDED : அக் 20, 2025 09:43 PM
UPDATED : அக் 20, 2025 09:51 PMADDED : அக் 20, 2025 09:43 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து நகர்ப்புற மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருத்தாசலம்: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து நகர்ப்புற மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்டது, விருத்தாசலம் சட்டசபை தொகுதி. விருத்தாசலம் நகர எல்லைக்குள் மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், அரசு அச்சகம், வேளாண் அறிவியல் நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலையம், வணிக வரித்துறை, செராமிக் தொழிற்பேட்டை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், அரசு கருவூலம், அரசு பொது மருத்துவமனை மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்டது, விருத்தாசலம் சட்டசபை தொகுதி. விருத்தாசலம் நகர எல்லைக்குள் மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், அரசு அச்சகம், வேளாண் அறிவியல் நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலையம், வணிக வரித்துறை, செராமிக் தொழிற்பேட்டை, ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், அரசு கருவூலம், அரசு பொது மருத்துவமனை மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும், திருச்சி - சென்னை மார்க்கத்தில், பிரதான ரயில் நிலையமாக இருப்பதால் கல்வி, வணிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள்; மும்பை, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கு செல்ல வசதிகள் உள்ளது.
மேலும், திருச்சி - சென்னை மார்க்கத்தில், பிரதான ரயில் நிலையமாக இருப்பதால் கல்வி, வணிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் சென்னை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள்; மும்பை, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கு செல்ல வசதிகள் உள்ளது.
விருத்தாசலம் நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து 17.1.1970 முதல் வயலுார், நாச்சியார்பேட்டை, கண்டியங்குப்பம், மணலுார், பூதாமூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி, மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
விருத்தாசலம் நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து 17.1.1970 முதல் வயலுார், நாச்சியார்பேட்டை, கண்டியங்குப்பம், மணலுார், பூதாமூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி, மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
கடந்த 1975-76ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டன. ஆனால், இதுநாள் வரை விருத்தாசலம் நகராட்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டாகவே உள்ளது.
கடந்த 1975-76ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டன. ஆனால், இதுநாள் வரை விருத்தாசலம் நகராட்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டாகவே உள்ளது.
மணிமுக்தாற்றில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறாதது என மக்கள் பிரச்னை நீள்கிறது. இதற்கு நகராட்சி நிர்வாகத்தில் போதிய நிதிவசதி இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.
மணிமுக்தாற்றில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு, போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறாதது என மக்கள் பிரச்னை நீள்கிறது. இதற்கு நகராட்சி நிர்வாகத்தில் போதிய நிதிவசதி இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.
விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிப்பதால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். மக்களின் அடிப்படை வசதிகள், நிதி பிரச்னையின்றி தேவைகளை சுலபமாக தீர்த்து வைக்க முடியும்.
விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிப்பதால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். மக்களின் அடிப்படை வசதிகள், நிதி பிரச்னையின்றி தேவைகளை சுலபமாக தீர்த்து வைக்க முடியும்.
மாநில தேர்தல் ஆணையத்தின் மற்றொரு அங்கமான மறு வரையறை ஆணையம் மூலம் 33 வார்டுகளிலும் வாக்காளர்கள் சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், வாக்காளர்களை 33 வார்டுகளுக்குள் பிரித்து வைக்கும் பணியே நடந்தது.
மாநில தேர்தல் ஆணையத்தின் மற்றொரு அங்கமான மறு வரையறை ஆணையம் மூலம் 33 வார்டுகளிலும் வாக்காளர்கள் சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், வாக்காளர்களை 33 வார்டுகளுக்குள் பிரித்து வைக்கும் பணியே நடந்தது.
மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு
விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் உட்பட சுற்றியுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் மன்ற தீர்மானம் நிறைவேற்றி, கடந்த ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்த எந்த அறிவிப்பும் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை.
மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு
விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் உட்பட சுற்றியுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் மன்ற தீர்மானம் நிறைவேற்றி, கடந்த ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்த எந்த அறிவிப்பும் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை.
தொடர் போராட்டங்கள்
தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க போராட்டக்குழு சார்பில் வழக்கறிஞர் தங்கதனவேல் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், பொது மக்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து உண்ணாவிரதம், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் என, போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.
தொடர் போராட்டங்கள்
தனி மாவட்டம் அறிவிக்கக் கோரி, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க போராட்டக்குழு சார்பில் வழக்கறிஞர் தங்கதனவேல் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், பொது மக்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து உண்ணாவிரதம், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் என, போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.
முதல்வர் வாக்குறுதி
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில், விருத்தாசலத்திற்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, பெட்டியில் பூட்டி எடுத்துச் சென்றார்.
முதல்வர் வாக்குறுதி
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில், விருத்தாசலத்திற்கு வந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, பெட்டியில் பூட்டி எடுத்துச் சென்றார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், தலைமை செயலகத்தில் என்னை நேரில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். அந்தப் பெட்டியில், 50 சதவீத மனுக்கள், விருத்தாசலம் தனி மாவட்டம் கேட்டு கொடுக்கப்பட்டிருந்தன.
ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், தலைமை செயலகத்தில் என்னை நேரில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். அந்தப் பெட்டியில், 50 சதவீத மனுக்கள், விருத்தாசலம் தனி மாவட்டம் கேட்டு கொடுக்கப்பட்டிருந்தன.
மேலும், சிறுமி சந்தனா என்பவர், முதல்வரிடம் தனி மாவட்டம் கேட்ட கோரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், நான்கரை ஆண்டுகளாகியும் தனி மாவட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது தொகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சிறுமி சந்தனா என்பவர், முதல்வரிடம் தனி மாவட்டம் கேட்ட கோரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், நான்கரை ஆண்டுகளாகியும் தனி மாவட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது தொகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் ஆய்வு
முந்தைய சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்னதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து, வேப்பூரை தனி பேரூராட்சியாக மாற்றுவது மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் அருகிலுள்ள கர்னத்தம், கோவிலானுார், பள்ளிப்பட்டு கிராமங்களையும், பெண்ணாடம் பேரூராட்சியில் பெ.பொன்னேரி ஊராட்சியை சேர்ப்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனால் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், கானல் நீரானது.
கலெக்டர் ஆய்வு
முந்தைய சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்னதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து, வேப்பூரை தனி பேரூராட்சியாக மாற்றுவது மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் அருகிலுள்ள கர்னத்தம், கோவிலானுார், பள்ளிப்பட்டு கிராமங்களையும், பெண்ணாடம் பேரூராட்சியில் பெ.பொன்னேரி ஊராட்சியை சேர்ப்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனால் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், கானல் நீரானது.
'மாஜி.,க்கள்' - சிட்டிங் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் (1996 - 2001) துவங்கி, பா.ம.க., கோவிந்தசாமி, தே.மு.தி.க., விஜயகாந்த், தே.மு.தி.க., முத்துக்குமார், அ.தி.மு.க., கலைச்செல்வன், சிட்டிங் காங்., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., என பலர் சட்டசபையில் தனி மாவட்டம் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், இக்கோரிக்கை நிறைவேறவில்லை.
'மாஜி.,க்கள்' - சிட்டிங் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் (1996 - 2001) துவங்கி, பா.ம.க., கோவிந்தசாமி, தே.மு.தி.க., விஜயகாந்த், தே.மு.தி.க., முத்துக்குமார், அ.தி.மு.க., கலைச்செல்வன், சிட்டிங் காங்., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., என பலர் சட்டசபையில் தனி மாவட்டம் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், இக்கோரிக்கை நிறைவேறவில்லை.
எனவே, விவசாயம், தொழில்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்னைகள் குறைந்து வேலைவாய்ப்பு பெருகிட விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
எனவே, விவசாயம், தொழில்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்னைகள் குறைந்து வேலைவாய்ப்பு பெருகிட விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், கொடுத்த தேர்தல் வாக்குறுதியை மீதமுள்ள ஆட்சி காலத்தில் நிறைவேற்றுவாரா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், கொடுத்த தேர்தல் வாக்குறுதியை மீதமுள்ள ஆட்சி காலத்தில் நிறைவேற்றுவாரா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.