Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

ADDED : ஜன 19, 2024 08:04 AM


Google News
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே குளத்தில் மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி மீன் பிடி தொழிலாளி இறந்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசுபதி, 53; மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கும்போது நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அசுபதியின் உடல் குளத்தின் கரையோரம் ஒதுங்கியது.

இதுகுறித்து, பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us