ADDED : ஜூலை 18, 2024 01:46 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசன், எஸ்.ஐ., ரங்கசாமி தர்மபுரி நகர பகுதியில், நேற்று முன்தினம் ரோந்து சென்றார்.
அப்போது, நல்லம்பள்ளி அடுத்த சாாமிசெட்டிபட்டியை சேர்ந்த, பழனி-யம்மாள், 48, என்பவர், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், மது பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்த, 40 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தார்.