Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது

காப்பர் ஒயர் திருடியவர் கைது

ADDED : ஜூலை 13, 2024 08:19 AM


Google News
ஓசூர்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே திப்பசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன், 60.

கிருஷ்ண-கிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தின் செக்யூரிட்டி சர்வீசில் மேலாளராக பணியாற்றுகிறார்; நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பணியில் இருந்த போது, டாடா நிறுவனத்தின் கட்டட கட்டுமான பகு-தியில் இருந்த, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 15 அடி நீள காப்பர் கம்பி ஒயரை, ஒருவர் திருட முயன்றார். இதை கவனித்த முருகேசன், அந்த நபரை கையும், களவுமாக பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசார-ணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் கணேஷ் கால-னியை சேர்ந்த கோவிந்தராஜ், 31, என்பதும், டாடா நிறுவனத்தில் தனியார் ஒப்பந்தத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், காப்பர் கம்பி ஒயர் மற்றும் அவரது பேஷன் புரோ பைக்கை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us