Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ

மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ

ADDED : அக் 04, 2025 01:15 AM


Google News
அரூர், மாணவியை கர்ப்பமாக்கிய, கல்லுாரி மாணவர் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர்.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி நடூரை சேர்ந்தவர் ஜெயசக்தி, 19. இவர், கோவை அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், 18 வயது கல்லுாரி மாணவியை காதலித்து வந்தார். மாணவி பிளஸ் 2 படித்த போது, ஜெயசக்தியுடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமானார்.

மாணவி, 7 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த, 1ல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் ஜெயசக்தி மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us