Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

ADDED : டிச 05, 2025 11:19 AM


Google News
தர்மபுரி: பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல் உள்-ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், சாலைமறியலில் ஈடுபட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 136 பேரை, போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்-நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், சாலை-மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில், தமி-ழக முதல்வரின், 2021ம் ஆண்டு தேர்தல் வாக்கு-றுதி படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்-டத்தை, தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்ப-டுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழி-யர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் அரசு ஊழியர்களுக்கு அரசு சிறப்பு சலுகைகளை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்-பப்பட்டது. தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட, 46 பெண்கள் உள்பட, 136 பேரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us