ADDED : ஜூலை 13, 2024 04:55 AM
வேடசந்துார், : வேடசந்துார் அரசு கலை ,அறிவியல் கல்லுாரியில் கல்லூரி அளவிலான கலை இலக்கிய
போட்டிகள் நடந்தன. கல்லுாரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் காமிலா பேகம் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மதுரை காமராஜர் பல்கலை மாலை நேர கல்லுாரி தமிழ் தமிழ் துறை பேராசிரியர் மலர்விழி, ஆத்துார் கூட்டுறவு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியை கவிதா பேசினர். வேடசந்துார் அரசு கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்றார். துறை தலைவர்கள் அமுதவல்லி, நாகலட்சுமி, முன்னாள் பேராசிரியர் கருப்பசாமி பங்கேற்றனர்.