/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை
நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை
நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை
நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்; புதர் மண்டிய மயானம் கரடி கூட்டம் பகுதியில் மயான விரிவாக்கம் தேவை

தெரு விளக்குகள் இல்லை
சக்திவேல், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர், அக்கமநாயக்கன்புதுார்: தெரு விளக்குகள் போதுமானதாக இல்லை . சில இடங்களில் பொருத்தப்படாமல் உள்ளது.
எந்த வசதியும் இல்லை
பிரகாஷ், தனியார் நிறுவன ஊழியர், அக்கம நாயக்கன்புதுார்: அக்கமநாயக்கன்புதுாரில் உள்ள சுடுகாட்டில் எந்த வசதியும் இல்லை. எரியூட்டு மேடை சேதமடைந்துள்ளது.
போதுமான இடவசதி இல்லை
ஜெகன், தனியார் நிறுவன ஊழியர், கரடி கூட்டம்: குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். சுடுகாடு விரிவாக்கம் செய்யப்படாததால் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் அடக்கம் செய்யும் நிலையில் உள்ளோம். விரைவில் சுடுகாடு விரிவாக்கம் செய்து தர வேண்டும்.
சாலைகள் அமைப்பு
நரேந்திர பிரசாத், ஊராட்சி துணைத் தலைவர்: சுகாதாரப் பணிகள், குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலத்தடி தண்ணீர் தொட்டிகள் 30,000 லிட்டர் அளவில் அமைக்கப்பட உள்ளது. வீடுகள் அனைத்தும் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்க திட்டமிடப்படுகிறது. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.
மேம்படுத்த நடவடிக்கை
ராஜ்மோகன்,ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சண்முக நதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.