ADDED : ஜூலை 17, 2024 12:28 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமான நலவாரியங்களின் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும், இணைய வழியில் அழிந்து போன தரவுகளை மீட்டெடுக்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3000 உயர்த்திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழநி தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.