Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காவேரி செட்டிபட்டி கோயில் கும்பாபிஷேகம்

காவேரி செட்டிபட்டி கோயில் கும்பாபிஷேகம்

காவேரி செட்டிபட்டி கோயில் கும்பாபிஷேகம்

காவேரி செட்டிபட்டி கோயில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 27, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
சாணார்பட்டி : -சாணார்பட்டி அருகே காவேரிசெட்டிபட்டி விநாயகர்,காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

இவ்விழாவையொட்டி திருச்செந்துார், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர் கோயில் மலை, வைகை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் ,முளைப்பாரி மேளதாளம் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், மகா சங்கல்ப்பம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது.

நேற்று விநாயகர் யாகம், மகா சங்கல்ப்பம், வேத பாராயணம், உயிர் ஊட்டுதல், மூலிகை யாகம், தீபாராதனை உள்ளிட்ட 3 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்தம் எடுத்துச் செல்ல சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 5 க்கு மேற்பட்ட கருடர்கள் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காவேரி செட்டிபட்டி ஊர் மக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us