ADDED : ஜூன் 26, 2024 07:01 AM
பழநி : ஆயக்குடி குட்டி கரடு, பாலசமுத்திரம் கத்தாளம்பாறை, காவலப்பட்டி பொந்துபுளி உள்ளிட்ட பகுதி பியர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க கலெக்டர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள் முகாம் நடத்தி வருகின்றனர்.
ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதியோர் ஓய்வூதியம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாசில்தார் சக்திவேலன் கலந்து கொண்டார்.