ADDED : மார் 14, 2025 06:10 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண் போல் பேசி இன்ஸ்டாகிராமில் இளம் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபருக்கு பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திண்டுக்கல் பழைய கரூர் ரோடு குளத்துாரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு 4 மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் அறிமுகமானார். இருவரும் தோழிகளாக பழகினர். இந்நிலையில் அப்பெண்ணுக்கு தோழி போல் பழகிய நபர் இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து ஆபாச படம் அனுப்பப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உறவினர்களிடம் தெரிவித்தார். எதிர் தரப்பில் பெண் போல் பேசியது ஆண் என தெரிந்தது. உடனே அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க முடிவு செய்து இளம்பெண் தனக்கு ஆபாச படம் அனுப்பிய நபரிடம் நேரில் பேச வேண்டும் வாருங்கள் என அழைத்தார். அவரும் நம்பி திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதிக்கு வந்தார். அப்போது இளம்பெண் உறவினர்களுடன் சேர்ந்து நபரை மடக்கி தர்ம அடி கொடுத்தனர். விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் அனுமந்த நகரை சேர்ந்த செல்வம் 46,என்பது தெரிந்தது. அவரை வடக்கு போலீசில் ஒப்படைக்க போலீசார் விசாரித்தனர்.