Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்

தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்

தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்

தெரு நாய்,கொசுத்தொல்லையால் நித்தம் தவிப்பு; அல்லல்படும் பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள்

ADDED : ஜூன் 27, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
பழநி : தெரு நாய் ,கொசு தொல்லை , சேதமடைந்த ரோடு என பழநி நகராட்சி 9 வது வார்டு மக்கள் நித்தம் அல்லல்படும் நிலையில் உள்ளனர்.

கிழக்கு ரத வீதி, மாரியம்மன் கோயில் சந்து, நடேசர் சன்னதி தெரு, கோசல விநாயகர் கோயில் சந்து, அங்கண்ணன் தெரு, சுப்பா தெரு, தெற்கு ரத வீதி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ள கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதியில் கோயில் விழாக் காலங்களில் தேரோட்டம் நடைபெறும்.முக்கியமான இந்த சாலைகள் சேதமடைந்து பேட்ச் ஒர்க் மட்டும் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெள்ளி,செவ்வாய் நாட்களில் அம்மன் கோயிலுக்கு கிராம புறங்களில் இருந்து வரும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். ரேஷன் கடை ,அங்கன்வாடி இல்லாதது இப்பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது.

அச்சத்துடன் நடமாடும் சூழல்


வேல்முருகன், அபிஷேக ஸ்டோர், நடேசர் சன்னதி தெரு : பெரியநாயகி அம்மன் கோயில் அருகில் நடேசன் சன்னதி தெரு உள்ளது. இதன் தெரு பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. சாலையை முழுவதும் அகற்றி புதியதாக சாலை அமைக்க வேண்டும். தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நடந்து வர சிரமம்


பிச்சைமுத்து, பொரிகடலை கடை, மாரியம்மன் கோயில் சந்து : அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஜிகா பைப் லைன் திட்டம் நகராட்சி சார்பில் கொண்டுவரப்பட்டது. ஆனால் எங்கள் பகுதியில் மெயின் பைப் சேதமடைந்துள்ளது .

மெயின் பைப்பில் இருந்து வீடுகளுக்கு குழாய்கள் சொந்த செலவில் இணைத்து உள்ளோம். இதில் ரோடு சேதமாக இப்பகுதி குறுகலான சந்துகளால் நடந்து வர வயது முதிர்ந்தவர்கள் சிரமம் அடைகின்றனர். உடனடியாக சாலைகளை சரி செய்ய வேண்டும்.

கொசுத்தொல்லை தாங்கல


கணேசன்,அர்ச்சகர், தெற்கு ரத வீதி : பழநியில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் நான்கு ரத வீதியிலே அதிக அளவில் நடைபெறுகிறது. பாதயாத்திரை பக்தர்கள் இவ்வழியே அதிக அளவில் கடந்து செல்வர். தேர் நிற்கும் இடத்தில் சாக்கடை, சாலை சேதமடைந்துள்ளது. சாக்கடையை துார்வார வேண்டும். கொசு தொல்லை அதிகம் உள்ளது. நாய் தொல்லை மிக அதிகம். சாலைகளில் மாடு, குதிரை அதிகம் திரிவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

ஒரு தலை பட்சமாக அதிகாரிகள்


புஷ்பலதா, கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : நாய் தொல்லை அதிகம் உள்ளது. தெரு விளக்கு குடிநீர் வழங்கல் எந்தவித தடங்கல் இன்றி செயல்பட்டு வருகிறது. சாலை , சந்துகளில் பாதைகள் சேதமடைந்துள்ளது. சாலைகள் அமைப்பது குறித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.

எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு ஒரு தலை பட்சமாகவும் அதிகாரிகள் நடக்கின்றனர். ஜிகா பைத் திட்டத்தில் முழுவதும் நிறைவேற்றப்படாமல் தண்ணீர் சரியாக விநியோகிக்க முடியவில்லை. சாக்கடைகள் சரிவர பராமரிக்காததால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us