ADDED : ஜூலை 12, 2024 07:58 AM

திண்டுக்கல்; திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆர்.வி.எஸ்., கல்லுாரி, சென்னை டி.சி.இ., வேதா சர்வதேச யோகா கல்வி அரங்கம் புரபஷனல் இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெட்டெக் (பி.ஐ.எஸ்.டி.,) இணைந்து அக்டோபர் 5 ல் சர்வதேச யோகா மாநாட்டை நடத்துகின்றனர்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் ஆர்.வி.எஸ்., கல்வி குழும இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. கல்வி அரங்க நிறுவனர் கமலக்கண்ணன், ஆலோசகர் மதிவாணன், ஸ்டேட்டெக் இயக்குனர் பிரேம்ராஜ், கல்லுாரி முதல்வர்கள் ரமேஷ் ,கண்ணன் பங்கேற்றனர். கல்வித்துறையில் யோகா ,செயற்கை நுண்ணறிவை இணைக்கும் ஒருங்கிணைந்த பசுமை புதுமை என்ற தலைப்பில் சர்வேதச அளவில் மாநாடு நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.