Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரத்தில் ஜனவரியில் அகில இந்திய கபடி போட்டி

 ஒட்டன்சத்திரத்தில் ஜனவரியில் அகில இந்திய கபடி போட்டி

 ஒட்டன்சத்திரத்தில் ஜனவரியில் அகில இந்திய கபடி போட்டி

 ஒட்டன்சத்திரத்தில் ஜனவரியில் அகில இந்திய கபடி போட்டி

ADDED : டிச 03, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் அகில இந்திய 'ஏ' கிரேட் கபடி போட்டி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்தது.

ஜனவரி 8, 9, 10,11ல் ஆண், பெண் இருபாலாருக்கான அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 800 க்கு மேற்பட்ட வீரர்கள் விளையாட உள்ளனர். முதல் பரிசாக ஆண்கள் ,பெண்கள் பிரிவுக்கு தலா ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.7 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.4 லட்சம் வழங்கப்பட உள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர்கள் மூன்று பேருக்கு டூவீலர், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசன், எம்.எல்.ஏ., காந்தி ராஜன், மாவட்ட அவைத் தலைவர் மோகன், மாவட்ட பொருளாளர் விஜயன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், ஜோதிஸ்வரன், பாலு, வீராசாமிநாதன், தங்கம் , பொன்ராஜ், சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன் சிக்கந்தர் பாஷா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மலர்விழிச்செல்வி, திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் கபடி கழக மாவட்ட துணைத் தலைவர் தனராஜ், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் சவடமுத்து கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us