/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிரதம மந்திரி கல்வி உதவி தொகை பெற அழைப்பு பிரதம மந்திரி கல்வி உதவி தொகை பெற அழைப்பு
பிரதம மந்திரி கல்வி உதவி தொகை பெற அழைப்பு
பிரதம மந்திரி கல்வி உதவி தொகை பெற அழைப்பு
பிரதம மந்திரி கல்வி உதவி தொகை பெற அழைப்பு
ADDED : செப் 24, 2025 08:36 AM
திண்டுக்கல் : இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2025- 26-ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சம், செப். 30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவர்கள் அதே இணையத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம். விபரங்களுக்கு National Scholarship Portal (https://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகலாம்.