ADDED : செப் 28, 2025 03:21 AM

நத்தம்: -நத்தம் அசோக் நகர் பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடபட்டு வருகிறது.
கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.
நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.


