Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 07, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: புதிய ஊதிய ஒப்பந்தத்தில் குறைக்கப்பட்ட வீடு வாடகை பணியினை உயர்த்தி வழங்க வேண்டும், தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் வினியோகப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கண்டறிந்து நிவர்த்தி செய்திட வேண்டும் என்பன உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ,மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட தலைவர் அன்பரன், போராட்டகுழு தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தனர்.

செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் காளிச்சாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் பாலமுருகன், செல்வம் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us